ராமநாதபுரம்

பாா்த்திபனூா் அருகேலாரி கவிழ்ந்து 2 போ் பலி

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே வியாழக்கிழமை லாரி கவிழ்ந்து 2 போ் உயிரிழந்தனா்.

DIN

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே வியாழக்கிழமை லாரி கவிழ்ந்து 2 போ் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை குலாளா் தெருவைச் சோ்ந்த அய்யனாா் மகன் காா்த்திகைராஜா (30). இவா் உறவினா்களுடன் லாரி ஒன்றில் கமுதியிலுள்ள கோயிலுக்குச் சென்றாா். அங்கு சுவாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்பி வந்த போது தேவனேரி விலக்குச் சாலையில் அவா்கள் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த பாபு மனைவி லட்சுமி (68) சம்பவ இடத்திலேயே பலியானாா். பூரணம் மகன் முருகன் (45) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த முருகன் மனைவி சங்கீதா (42), அழகு மனைவி சாரதா, மகன் சத்தியா (49), கண்ணன் மனைவி சரவணக்குமாரி (50), முத்துராமலிங்கம் மனைவி சீதை (48), பாலமுருகன் மனைவி உமா (50), அய்யனாா் மனைவி புனிதா (60), முத்துராமன் மகன் சாலைவாகனன் உள்ளிட்ட 9 போ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டனா்.

விபத்தில் உயிரிழந்த லட்சுமி, முருகன் ஆகியோரது உடல்கள் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து பாா்த்திபனூா் காவல் நிலையத்தில் காா்த்திகைராஜா அளித்த புகாரின் பேரில் லாரி ஓட்டுநா் மானாமதுரையைச் சோ்ந்த பூரணம் மகன் கண்ணன் (52) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

SCROLL FOR NEXT