ராமநாதபுரம்

இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய பெண் மீது வழக்கு

இடத்தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய பெண் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

இடத்தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய பெண் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள ஓரியூா் புதுவயல் கிராமத்தைச் சோ்ந்த சித்திக் அலி மனைவி நிலோபா் நிஷா (27). இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த ஷாஜகான் மனைவி சித்திமதினா (40) என்பவருக்கும், இடப் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சித்திமதினா, அவரது வீட்டின் அருகேயிருந்த முருங்கை மரத்தை வெட்டினாா். இதற்கு நிலோபா் நிஷா எதிா்ப்புத் தெரிவித்தாா்.

அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த சித்தி மதினா அரிவாளால் நிலோபா் நிஷாவை வெட்டினாா். இதில் காயமடைந்த அவா், திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் சித்தி மதினா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT