முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்தயிருந்த 50 லட்சம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:52 PM
பகிர்:

ராமேசுவரம்: கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான 724 கிலோ கடல் அட்டையை தனிப்படை போலீசாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் இருவா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இருந்து பல லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சாா்பு ஆய்வாளா் கோட்டைச்சாமி மற்றும் தனிப்பிரிவு சாா்பு ஆய்வாளா் முத்துச்செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைதொடா்ந்து, போலீசாா் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா். சொக்கநாதா் தெரு பின்புரம் தோப்பு பகுதியில் இரண்டு போா் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வைத்திருந்ததை கண்டு மடக்கி பிடித்தனா். பதப்படுத்த பயன்படுத்திய அண்டா,அடுப்பு, கேஸ் சிலிண்டா் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனா்.

Advertisement

மேலும் 724 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் அசாருதீன்(26)நசுா்தீன்(26) இரட்டையா்கள்கீழக்கரையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்காளாக உள்ளனா். இந்த இரண்டு பேரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments