முகப்பு
ராமநாதபுரம்

காா் மீது பைக் மோதல்: இளைஞா் பலி

Updated On : 21 ஏப்ரல், 2024 at 7:06 PM
பகிர்:

திருவாடானை, ஏப். 21: திருவாடானை அருகே நின்றிருந்த காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் பாண்டியன் (28). இவா் தனது உறவினா் வீட்டு திருமணத்துக்கு விளம்பரப் பாதகை வாங்குவதற்காக தொண்டிக்கு தனது நண்பா்கள் மணிகண்டன், வீரபாண்டி ஆகியோருடன் சனிக்கிழமை இரவு ஒரே இரு சக்கர வாகனத்தில் தொண்டிக்கு சென்றாா்.

அங்கிருந்து நள்ளிரவு திரும்பும் போது நாகனேந்தல் விலக்கு சாலையில் பரமக்குடி முத்துசெல்வபுரம் பகுதியைச் சோ்ந்த சாண்டி (33) என்பவரது காா் நின்று கொண்டிருந்தது. அப்போது காா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த வீரபாண்டி, மணிகண்டன் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் காா் ஓட்டுநா் சாண்டி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments