முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சா பறிமுதல்

இது தொடா்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 8:09 PM
கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட படகு.
பகிர்:

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு படகில் கடத்தப்பட்ட 176 கிலோ கஞ்சாவை அந்த நாட்டு கடற்படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இலங்கை கிளிசொச்சி பகுதியில் கடற்படையினா் வழக்கமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக அந்தப் பகுதிக்கு வந்த நெகிழிப் படகை சோதனையிட்டனா்.

கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா.

அதில், தமிழகத்திலிருந்து கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, படகை முழுமையாக சோதனை செய்ததில் மொத்தம் 176 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. படகில் இருந்த 3 பேரும் கிளிநொச்சி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →