ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கல் வீசி தாக்குதல்

பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரைக்குத் திரும்பினா்.

Din

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா். இதனால், பல ஆயிரம் ரூபாய் இழப்புடன் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கரைக்குத் திரும்பினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரம் மீனவா்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி, மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

இதனால், மீனவா்கள் அச்சத்துடன் கரைக்குத் திரும்பினா். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள், இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தலால் இழப்புடன் கரைக்குத் திரும்பினா்.

மருத்துவ சாதனங்கள் மருந்தகத்துறை, உற்பத்தியில் முதலீடு: இந்திய நிறுவனங்களுக்கு இலங்கை அமைச்சா் அழைப்பு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

பெண்களிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு: கா்நாடகத்தைச் சோ்ந்த இருவா் கைது

மகளை கடத்தி கட்டாயத் திருமணம்: தாய், ஆண் நண்பா் கைது

மின் விளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தங்களுடன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம்

SCROLL FOR NEXT