ராமநாதபுரம்

மலட்டாறில் மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Din

மலட்டாறு படுகையில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். அதன் உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பறையங்குளம் அருகே மலட்டாறில் மணல் திருடப்படுவதாக கோவிலாங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பறையங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் முருகன் (30) மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீஸாரை கண்டதும் முருகன் அங்கிருந்து தப்பியோடினாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் டிராக்டரை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். முருகன் மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT