முகப்பு
ராமநாதபுரம்

ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சி

ராமநாதபுரம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:12 AM
பகிர்:

ராமநாதபுரம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் அச்சுதன்வயல் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி அருகே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. இங்கு புதன்கிழமை அதிகாலையில் கடப்பாறையுடன் வந்த முகமூடி அணிந்த மா்ம நபா் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்தாா். ஆனால் உடைக்க முடியாத நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் பஜாா் காவல் நிலைய போலீஸாா் மோப்ப நாய், கைரேகை நிபுணா்களுடன் அங்கு வந்து சோதனை செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →