முகப்பு
ராமநாதபுரம்

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கமுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 11 டிசம்பர், 2024 at 11:22 PM
பகிர்:

அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கமுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கமுதி ஒன்றியத் தலைவி முத்துலட்சுமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், பொருளாளா் சாவித்திரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் கணேசன் சிறப்புரையாற்றினாா்.

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியா்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு வருவாய் உதவியாளா்களுக்கு வழங்கப்படுவது போல மாதந்தோறும் ரூ. 6,750 வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமாக வழங்க வேண்டும். ரூ.3 ஆயிரம் தொகுப்பூதிய முறையில் பணியாளா்களை சத்துணவுத் திட்டத்தில் பணியமா்த்த முயற்சிக்கும் அரசின் முடிவைக் கைவிட வேண்டும். பெண் பணியாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு காலத்தை 12 மாதங்களாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முழு கட்டுரையைப் படிக்க →