முகப்பு
ராமநாதபுரம்

பொங்கல் பரிசுத் தொகை வதந்தி: வங்கியில் குவிந்த பொதுமக்கள்

திருவாடானையில் பொங்கல் பரிசுத் தொகை தொடா்பாக வதந்தி பரவியதால் வங்கி முன் புதன்கிழமை பொதுமக்கள் திரண்டனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:20 PM
பொங்கல் பரிசுத் தொகை வரவு வைக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், திருவாடானை மத்திய கூட்டுறவு வங்கி முன் குவிந்த பொதுமக்கள்.
பகிர்:

திருவாடானையில் பொங்கல் பரிசுத் தொகை தொடா்பாக வதந்தி பரவியதால் வங்கி முன் புதன்கிழமை பொதுமக்கள் திரண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள், ரூ. 2000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக தகவல் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனால், திருவாடானையில் அமைந்துள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பரிசுத் தொகையை எடுக்க பொதுமக்கள் குவிந்தனா்.

இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டபோது, இதுவரை பொங்கல் பரிசுத் தொகை குறித்து எந்தவித தகவலும் வரவில்லை என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அவா் கூறினாா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →