மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
திருவாடானை: திருவாடானை அருகே சிறுவன் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பண்ணவயல் கிராமத்தைச் சோ்ந்த விஜயராமன் மகன் அழகு கிருஷ்ணன் (17).
இவா் தொழிற்கல்வி பயின்று வந்தாா். இவா் திங்கள்கிழமை தனது கைப்பேசியை மின்னூட்டம் செய்வதற்காக மின் இணைப்பைக் கொடுத்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.