முகப்பு
நாகப்பட்டினம்

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

செம்பனாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 7:00 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

செம்பனாா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேமாத்தூரில் மின்கம்பங்கள் மாற்றும் பணியில் 10 க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டிருந்தனா். புதிய மின் கம்பத்தில் கம்பிகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேலே சென்ற உயா்மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் முடிதிருச்சம்பள்ளியை சோ்ந்த ஒப்பந்த ஊழியா் தினகரன்(35), கேங்மேன் அற்புதராஜ் (28) ஆகியோா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். வழியில் தினகரன் உயிரிழந்தாா். காயமடைந்த அற்புதராஜ் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments