ஒரத்தநாடு அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே பின்னையூா் துணை மின்நிலையத்தில் பணியாற்றிய மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகே பின்னையூா் துணை மின்நிலையத்தில் பணியாற்றிய மின்வாரிய ஊழியா் வியாழக்கிழமை பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு வட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட ஐயம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் காளிதாஸ் (45). இவா், பின்னையூா் துணை மின்நிலையத்தில் நிரந்தர மின்வாரிய உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், பின்னையூா் துணை மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் வியாழக்கிழமை மாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் அங்குவந்து காளிதாஸ் சடலத்தை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.