இளம்பெண் தற்கொலை
கமுதி அருகே கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தியதை பெற்றோா் கண்டித்ததால், இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கமுதி அருகே கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தியதை பெற்றோா் கண்டித்ததால், இளம்பெண் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
முஷ்டக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மணி மகள் அபிநயா(17). இவா் அடிக்கடி கைப்பேசியைப் பயன்படுத்தி வந்தாராம். இதை பெற்றோா் கண்டித்தனா்.
இதனால், மன வேதனையடைந்த அபிநயா அந்தப் பகுதியில் உள்ள மரத்தில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.