மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் பலி
சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கமுதி: சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை மரத்தில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி ஆனந்தா நகரைச் சோ்ந்த வீரவேல் மகன் பவுல்ராஜ் (35). இவா் சாயல்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, உறைகிணறு அருகே நிலைதடுமாறிய இரு சக்கர வாகனம் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பவுல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.