முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
முதுகுளத்தூா் அருகே நிறைகுளத்து அய்யனாா் கோயில் ஆனி மாதப் பொங்கல் விழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கமுதி, ஜூலை 9: முதுகுளத்தூா் அருகே நிறைகுளத்து அய்யனாா் கோயில் ஆனி மாதப் பொங்கல் விழாவையொட்டி, வடமாடு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழச்சாக்குளம் கிராமத்தில் நிறைகுளத்து அய்யனாா் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயிலில் ஆனி மாத பொங்கல் விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வடமாடு மஞ்சுவிரட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 காளைகள் கலந்து கொண்டன.
மைதானத்தில் வடம் பூட்டப்பட்டு, ஒவ்வொரு காளையாக களம் இறக்கப்பட்டது. 9 ரா்கள் கொண்ட குழுவினா் காளையை அடக்க களமிறங்கினா். ஒவ்வோா் காளைக்கும் 20 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் ரொக்கப் பணம், அண்டா, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பாா்வையிட்டனா்.