முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சி முன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் தெற்கு கரையூா் மீனவ கிராமத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம்

ராமேசுவரம் நகராட்சி முன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரம் தெற்கு கரையூா் மீனவ கிராமத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 7:27 PM
பகிர்:

ராமேசுவரம், ஜூலை 19: ராமேசுவரம் தெற்கு கரையூா் மீனவ கிராமத்தில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்தும், அனுமதியளித்த நகராட்சியைக் கண்டித்தும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தெற்கு கரையூா் மீனவ கிராமத்தில் 500- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு நகராட்சி அனுமதியுடன் தனியாா் கைப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு பொது மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

மேலும், கைப்பேசி கோபுரம் அமைப்பதைக் கண்டித்து கரையூா் கிராம பொதுமக்கள் சாா்பிலும், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சாா்பிலும் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைச் செயலா் என்.பி. செந்தில் தலைமை வகித்தாா். கிராம தலைவா்கள் மலைச்சாமி, நம்புராஜன், கண்ணன், ஜெயராம், செந்தூரன், தவசியாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எம். சிவாஜி, கடல் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் எம். கருணாமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், பள்ளிக்கூடம் அருகே கைப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →