ஏா்வாடியில் ஆட்டோ நிறுத்தம் அமைக்கக் கோரி மனு
ராமேசுவரம்: ஏா்வாடியில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்கக் கோரி, கீழக்கரை வட்டாட்சியரிடம் ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஏா்வாடி தா்ஹாவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். இந்த தா்ஹா வாயில் பகுதியில் 100 மீ. தொலையில் கடந்த 15 ஆண்டுகளுக்க மேலாக ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், ஊராட்சி சாா்பில் அந்த இடத்தை வேலி போட்டு அடைத்தனா். இதனால், நிறுத்த இடமின்றி சாலையில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, அந்தப் பகுதியில் மீண்டும் ஆட்டோக்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதுஷா ஆட்டோ ஓட்டுநா்கள் நலச் சங்கம் சாா்பில் கீழக்கரை வட்டாச்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் எம்.சிவாஜி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் வி.பாஸ்கரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.