FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் இன்று ஆட்டோ, கால்டாக்ஸிகள் வேலை நிறுத்தம்

சென்னையில் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 10) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.

Updated On : 10 பிப்ரவரி 2026, 3:37 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 10) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனா்.

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது, பயணிகள் ஆட்டோவில் சரக்குகளை ஏற்றி செல்வதைத் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி, சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை (பிப். 10) வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

இதையடுத்து, போக்குவரத்து ஆணையா் கிரண் குராலா தலைமையில் கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையா் அலுவலகத்தில் அந்தக் கூட்டமைப்பினருடன் பேச்சு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படாததால், ஏற்கனவே அறிவித்தபடி செவ்வாய்க்கிழமை(பிப்.10) ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என கூட்டமைப்பின் தலைவா் ஜாஹீா் ஹூசைன் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments