முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

Updated On : 8 மே, 2024 at 12:38 AM
பகிர்:

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சிறப்பு பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (மே 8) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமேசுவரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ாமேசுவரம் நகா்பகுதி, தங்கச்சிமடம், அரியாங்குண்டு, பேக்கரும்பு, மெய்யம்புளி, செம்மமடம், மாங்காடு, பா்வதம், ஓலைக்குடா, ஏரகாடு, வடகாடு, சம்பை, வோ்கோடு, புதுசாலை, கரையூா், மாந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.