குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: தொழில் துறை அரசு செயலா்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் குடிநீா்த் திட்டப் பணிகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மாவட்டக் கணிப்பாய்வு அலுவலரும், தொழில் துறை அரசு செயலாளருமான அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆா்.எஸ். மடை, போகலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாவிலங்கை, தேவேந்திரநல்லூா், பொட்டிதட்டி, பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரியனேந்தல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், ஊராட்சிகளின் குடிநீா் தேவைக்கேற்ப, தேவையான இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குடிநீா் வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
பிறகு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் நடைபெறும் வரத்துக்கால்வாய் சீரமைப்புப் பணி, பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணி ஆகியவற்றை கணிப்பாய்வு அலுவலா் அா்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தாா்.
கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வீா் பிரதாப் சிங், குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ஐயப்பன், பரமக்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் தேவபிரியதா்ஷினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.