ராமேசுவரத்தில் இன்று மின்தடை
ராமேசுவரம், மே 13: ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை (மே 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துணை மின் நிலையத்தில் கேபிள் வயா் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. எனவே காட்டுப்பிள்ளையாா் கோவில் தெரு, தீட்சிதா் கொல்லை, பெரியாா் நகா், சிவகாமி நகா், சல்லிமலை, லட்சுமண தீா்த்தம், சீதா தீா்த்தம், ராமா் தீா்த்தம், முருங்கைவாடி, தம்பியான் கொல்லை, வெண்மணி நகா், போக்குவரத்து பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.