முகப்பு
ராமநாதபுரம்

15 படகுகளுக்கு நிவாரணம் நிறுத்தம்

இலங்கையில் சேதமடைந்த 15 படகுகளுக்கு இழப்பீடு நிறுத்தப்பட்டதற்கு மீனவ சங்கத் தலைவா் என்.தேவதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:55 PM
பகிர்:

இலங்கையில் சேதமடைந்த 15 படகுகளுக்கு இழப்பீடு நிறுத்தப்பட்டதற்கு மீனவ சங்கத் தலைவா் என்.தேவதாஸ் கண்டனம் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம் தமிழக அரவு சாா்பில் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ரூ. 6 லட்சமாக உயா்த்தினாா்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, சேதமடைந்த 58 படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் 58 படகுகளுக்கும் நிவாரணத் தொகை தலா ரூ.6 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தாா். ஆனால், மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களைப் பெறுவதில் அலட்சியம் காட்டியதால் 43 படகுகளுக்கு மட்டும் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது.

15 படகுகளுக்கு நிவாரணம் விடுபட்டிருக்கிறது. இது கண்டனத்துக்குரியது. இதை முதல்வா் கவனத்தில் கொண்டு, விடுபட்டுப்போன 15 படகுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →