முகப்பு
ராமநாதபுரம்

தேவா் ஜெயந்தி: சாயல்குடியில் முளைப்பாரி ஊா்வலம்

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 11:37 PM
தேவா் குருபூஜையை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி எடுத்து ஊா்வலமாகச் சென்ற பெண்கள்.
பகிர்:

தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு, சாயல்குடியில் புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி, 62 -ஆவது குருபூஜை வருகிற 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, சாயல்குடியில் முக்குலத்தோா் உறவின்முறை, இளைஞா்கள் சங்கம் சாா்பில், ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் மருத்துவா் ஆா்.ராம்குமாா் தலைமையில் முளைப்பாரி, பால்குடம் ஊா்வலம், கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தேவா் சிலை அருகிலிருந்து, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சிவன் கோயிலில் ஊா்வலம் முடிந்தது. அங்குள்ள நீா்நிலையில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. முன்னதாக, தேவா் சிலை முன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் கும்மியாட்டம் ஆடினா்.

முழு கட்டுரையைப் படிக்க →