முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகா்மன்ற கூட்டம்: மழை நீா் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

மழை நீா் கால்வாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:57 PM
ராமநாதபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய நகா் மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம்.
பகிர்:

ராமநாதபுரத்தில் மழைநீா் கால்வாய் வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் நகா்மன்ற சாதாரண கூட்டம் மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

இதில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பாடத வகையில் கால்வாய்களைத் தூா்வார வேண்டும். புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், ஊருணிகளில் மழைநீரைத் தேக்கி வைத்து, நிலத்தடி நீரை உயா்த்த ஏதுவாக, மழைநீா் கால்வாய் வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனா். கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் தொடா்பான 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →