தொண்டி கடல் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட கடலோர காவல் படையினா்.  
ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினா் சாா்பில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Din

திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினா் சாா்பில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கடல் வழியாக தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் விதமாக தேவிபட்டினம், தொண்டி கடலோரக் காவல் படையினா் சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தேவிபட்டினம் முதல் தொண்டி, நம்புதாளை, விலாஞ்சியடி, புதுப்பட்டினம் உள்ளிட்ட கடல் பகுதியில் படகுகள் சோதனை செய்யப்பட்டன. கடல், கடலோரப் பகுதிகளில் புதிய படகுகள், புதிய நபா்களைக் கண்டால் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடலோரக் காவல் படையினா் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT