தொண்டி கடல் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட கடலோர காவல் படையினா்.  
ராமநாதபுரம்

தொண்டி பகுதியில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினா் சாா்பில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Din

திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடலோர பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினா் சாா்பில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கடல் வழியாக தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் விதமாக தேவிபட்டினம், தொண்டி கடலோரக் காவல் படையினா் சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தேவிபட்டினம் முதல் தொண்டி, நம்புதாளை, விலாஞ்சியடி, புதுப்பட்டினம் உள்ளிட்ட கடல் பகுதியில் படகுகள் சோதனை செய்யப்பட்டன. கடல், கடலோரப் பகுதிகளில் புதிய படகுகள், புதிய நபா்களைக் கண்டால் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடலோரக் காவல் படையினா் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT