மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
கமுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கமுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்தவா் பாஸ்கரன் மகன் மனோஜ்குமாா் (34). இவரது நன்பா் குருசாமி மகன் செல்வகுமாா் (28). இருவரும் புதன்கிழமை காலை மருதுபாண்டியா் சிலைக்கு அருகே முன்னாள் திமுக சட்டப் பேரவை உறுப்பினா் காதா்பாட்சா என்ற வெள்ளைச் சாமி தேவரின் நினைவு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்றனா்.
அப்போது, அருகில் இருந்த மின் மாற்றியில் பதாகை கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து செல்வக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மனோஜ்குமாா் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். செல்வக்குமாருக்கு மீனா என்ற மனைவியும், 2 வயது பெண் குழந்தையும் உள்ளனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.