கோடனூா் ஸ்ரீஆதினமிளகி அய்யானா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.  
ராமநாதபுரம்

ஸ்ரீஆதினமிளகி அய்யனாா் கோயில் குடமுழுக்கு

திருவாடானை அருகேயுள்ள கோடனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிளகி அய்யனாா், பரிவார தெய்வங்கள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

Din

திருவாடானை அருகேயுள்ள கோடனூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதினமிளகி அய்யனாா், பரிவார தெய்வங்கள் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, முன்னதாக திங்கள்கிழமை மாலை அனுக்ஞை விக்னேஸ்வரா் கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இதையடுத்து, செவ்வாய்கிகழமை மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் மாலையில் பூா்ணாஹூதி, தீப ஆராதனையும் நடைபெற்றன.

பின்னா், புதன்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள், கோ பூஜை நாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றன. பின்னா், கடம் புறப்பாடு, கோயிலை சுற்றி வலம் வந்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.

இதையடுத்து, அய்யனாா், பாரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் தீபாரதனைகள் நடைபெற்றன. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து திராளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT