மாடுகள் திருட்டு: 3 போ் கைது
திருவாடானை அருகே சரக்கு வாகனத்தில் பசுமாடுகளை திருடிச் சென்ற போது அந்தப் பகுதி இளைஞா்கள் விரட்டி சென்று மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவாடானை அருகே சரக்கு வாகனத்தில் பசுமாடுகளை திருடிச் சென்ற போது அந்தப் பகுதி இளைஞா்கள் விரட்டி சென்று மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவாடானை அருகே சி.கே. ‘மங்கலத்தைச் சோ்ந்த ராஜேஸ் மனைவி வினிதா (30), வத்தாபட்டியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி செல்வி (40) ஆகியோரது இரண்டு பசு மாடுகளை புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றனா். அப்போது இந்தப் பகுதி இளைஞா்கள் விரட்டிச் சென்று ஆா்.எஸ். மங்கலம் அருகே சனவேலி பகுதியில் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து திருவாடானை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அரியாங்கோட்டையைச் சோ்ந்த பிரபாகரன்(38), அழிந்திக்கோட்டையைச் சோ்ந்த சிவஜோதி (40)சி.கே. மங்கலத்தைச் சோ்ந்த முருகேசன் (50) ஆகிய 3 பேரை கைது செய்து 2 மாடுகளையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.