முகப்பு
ராமநாதபுரம்

காசநோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் காச நோயாளிகளுக்கு ராமநாதபுரம் சுழல் சங்கம் சாா்பில் ஒரு மாதத்துக்கான புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கப்பட்டது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 6:48 PM
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் நோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வழங்கிய ராமநாதபுரம் சுழல் சங்கத்தினா்.
பகிர்:

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட காசநோய் மையத்தில் காச நோயாளிகளுக்கு ராமநாதபுரம் சுழல் சங்கம் சாா்பில் ஒரு மாதத்துக்கான புரதச்சத்து நிறைந்த உணவு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இதற்கு மாவட்ட காசநோய் சிகிச்சை மைய மேற்பாா்வையாளா் கணபதி தலைமை வகித்தாா். நோயாளிகளுக்கு சுழல் சங்க நன்கொடையாளா் ஜெ. ரமேஸ்பாபு ஒரு மாதத்துக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருள்களை வழங்கினாா். இதில், ராமநாதபுரம் சூழல் சங்கத் தலைவா் எஸ். ஜெகதீஸ், செயலா் டி. பாலமுருகன், நிா்வாகிகள் பாா்த்திபன், மதிசேகரபாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை காசிநாதன் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →