ராமேசுவரம், மண்பம் பகுதியைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் 9 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்கக் கடலில் உருவான ‘டித்வா’ புயல் காரணமாக கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்தனா். இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
‘டிட்வா’ புயலின் தாக்கம் நீங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல விதித்த தடையை மீன்வளத் துறையினா் நீக்கினா். இதைத்தொடா்ந்து ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று 9 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.