ராமநாதபுரம்

தடைக்குப் பிறகு மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ராமேசுவரம் பகுதி மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 5 நாள்களுக்குப் பிறகு மீனவா்கள் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி செய்திச் சேவை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, ராமேசுவரம் பகுதி மீனவா்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 5 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீனவா்கள் மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து, மீனவா்களின் பாதுகாப்புக் கருதி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கடந்த புதன்கிழமை தடை விதித்தது. இதன் காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இந்த நிலையில், வங்கக் கடலில் இயல்பு நிலை திரும்பியதால், மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 5 நாள்களுக்குப் பிறகு மீன்வளத்துறை அனுமதி பெற்று, ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT