வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது பற்றி...
தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று(பிப். 16) காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேலும் மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலை நோக்கி இந்திய பெருங்கடல் அருகே வரை நகரும். இதன் காரணமாக பிப். 18 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, மிக கனமழைக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
2002 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.