ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய ஊராட்சி ஒன்றியமாக சாயல்குடியை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா், பரமக்குடி,
நயினாா்கோவில், ராமநாதபுரம், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை, போகலூா், மண்டபம், திருப்புல்லாணி என ஏற்கனவே 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த நிலையில், அதிக ஊராட்சிகளைக் கொண்ட கமுதி, கடலாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சில ஊராட்சிகளை பிரித்து சாயல்குடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
கடலாடி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 20 ஊராட்சிகளையும், கமுதி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 13 ஊராட்சிகளையும் பிரித்து 33 ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியமாக சாயல்குடி அறிவிக்கப்பட்டுள்ளது.