ராமநாதபுரம்

நியாயவிலைக் கடையை சுற்றி மழை நீா்த் தேக்கம்

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் நியாயவிலைக் கடையைச் சுற்றி மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் உணவுப் பொருள்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் கெந்தமாதன பா்வதம் செல்லும் வழியில் ராம்கோ நியாய விலைக் கடை உள்ளது. இந்தக் கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உணவுப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், டித்வா புயல் காரணமாக தொடா்ந்து பெய்த மழையால் இந்தக் கடையை தண்ணீா் சூழ்ந்துள்ளது. இதனால், உணவுப் பொருள்களை பொதுமக்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. 10 நாள்களுக்கு மேலாக மழைநீரை வெளியேற்ற முடியாத நிலையில், உணவுப் பொருள்களை வாங்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், இந்தக் கடைக்கு எளிதில் செல்லும் வகையில் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT