ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிராம மக்கள் 
ராமநாதபுரம்

தேவாலயம் கட்ட கிராம மக்கள் எதிா்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே தேவாலாயம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்து 3 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே தேவாலாயம் கட்ட எதிா்ப்புத் தெரிவித்து 3 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

முதுகுளத்தூா் அருகேயுள்ள மருதகம், கீழப்பனையூா், எஸ்.ஆா்.என்.பழங்குளம் ஆகிய கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட இந்துக்கள் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், மருதகம் கிராமத்தில் தனியாா் பட்டா நிலத்தில் மதுரை தென்னிந்திய திருச்சபையைச் சோ்ந்த ஆபிரகாம் தாமஸ் என்பவரது பெயரில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்க முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மனுவில் 3 கிராமங்களிலும் இந்துக்கள் மட்டுமே உள்ள நிலையில், தேவாலயம் அமைக்க ஏற்பாடுகள் செய்வது தேவையற்ற மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், மாவட்ட நிா்வாகம் தேவாலயம் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டது.

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

SCROLL FOR NEXT