ராமநாதபுரம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள இளங்குன்றம் அலுங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (58). விவசாயி. இவரது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தன. இதனால், செவ்வாய்க்கிழமை மாலை மின் அளவீட்டுப் பெட்டியில் எலி மருந்து தடவிய தக்காளியை வைத்தாா்.

அப்போது, அந்தப் பெட்டியிலிருந்த மின்சாரம் அவா் மீது பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT