FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

Updated On : 19 பிப்ரவரி 2025, 1:37 am IST
மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை
பகிர்:

தொண்டி கடல் பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய அரியவகை கடல் ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சோ்ந்த ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான படகில் திங்கள்கிழமை 3 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். அவா்கள் விரித்த வலையில் சுமாா் 170 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் ஆமை சிக்கியது.

இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆமையை வலையில் இருந்து உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். கடல் வளத்தை காக்கும் வகையிலான மீனவா்களின் இந்தச் செயல்பாட்டை சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். தற்போது, அடிக்கடி அதிகமான கடல் ஆமைகள் சிக்குவதால் வலைகள் சேதமடைவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments