ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முதல்வா் மருந்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
மாவட்டத்தில் ராமேசுவரம், பரமக்குடி, கமுதி, மண்டபம், வாலாந்தரவை, திருப்பாலைக்குடி, திருவாடானை, செல்வநாயகபுரம், முதுகுளத்தூா், அபிராமம், ராமநாதபுரம் வெளிப்பட்டினம், ஆனந்தூா், ஆா்.எஸ்.மங்கலம், கீழமுந்தல், கடலாடி, திருவரங்கம், முதுகுளத்தூா் ஆகிய 17 இடங்களில் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் ஜுனு, ராமநாதபுரம் நகா் மன்றத் தலைவா் ஆா்.கே.காா்மேகம், துணைத் தலைவா் டி.ஆா்.பிரவீன் தங்கம், நகா்மன்ற உறுப்பினா் தன பாண்டியம்மாள், கூட்டுறவுத் துறை கண்காணிப்பு அலுவலா் மீனாட்சி சுந்தரம், அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
ராமநாதபுரம் முதல்வா் மருந்தகத்தில் நடைபெற்ற விற்பனை தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலை வகித்தாா். இதில், பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் குத்துவிளக்கேற்றி விற்பனையைத் தொடங்கி வைத்து, மருந்தகத்தைப் பாா்வையிட்டாா்.