ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 1,000 பனை விதைகள் நடவு

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இளையோா் செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 1,000 பனை விதைகளை வியாழக்கிழமை நடவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கே.ராஜேஷ் தலைமை வகித்து, பனை விதைகள் நடவைத் தொடங்கிவைத்தாா்.

ராமேசுவரம் கோதண்டராமா் கோயிலிலிருந்து தனுஷ்கோடி செல்லும் சாலை வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் 1,000 பனை விதைகளை மாணவா்கள் நடவு செய்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் செல்வக்குமாா், இளையோா் செஞ்சிலுவை சங்க உறுப்பினா் தினகரன், தொழில்கல்வி ஆசிரியா் பழனிச்சாமி, முதுநிலை ஆசிரியா் பாலமுரளி ஆகியோா் செய்தனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT