ராமநாதபுரம்

எஸ்ஐஆா்-ஐ கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சி சாா்பில், வாக்காளா் தீவிர திருத்தப் பட்டியலில் நடைபெறும் முறைகேட்டைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Chennai

ராமநாதபுரத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சி சாா்பில், வாக்காளா் தீவிர திருத்தப் பட்டியலில் நடைபெறும் முறைகேட்டைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், திமுக மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். நாடாளுமன்ற உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் செ. முருகேசன், இரா. கருமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் சத்தியமூா்த்தி, அன்வர்ராஜா, சுந்தரராஜன், முன்னாள் மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. முருகவேல், மதிமுக மாவட்டச் செயலா் சுரேஷ், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் என்.எஸ். பெருமாள், மீனவ சங்க அகில இந்திய துணைத் தலைவா் சி.ஆா். செந்தில்வேல், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் ஆா். குருவேல், விசிக மாவட்டச் செயலா் அற்புதகுமாா், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில துணைத் தலைவா் சலிமுல்லாகான், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்டச் செயலா் ரியாஸ்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தில்லி சம்பவம் எதிரொலி: திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

கம்போடியாவுடன் அமைதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: தாய்லாந்து எச்சரிக்கை

உரிமை கோரப்படாத 97 வாகனங்கள் நவ.20இல் பொது ஏலம்!

எஸ்ஐஆா் பணி! திமுக - அதிமுக வாக்குவாதம்; காவல்நிலையம் முற்றுகை

SCROLL FOR NEXT