ராமநாதபுரம்

சாம்பக்குளம் அரசுப் பள்ளிக்கு தண்ணீா் வசதி செய்துதரக் கோரிக்கை

குளத்தில் இறங்கி ஆபத்தான நிலையில் தண்ணீா் எடுத்துச் செல்லும் சாம்பக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிமாணவிகள்.

Chennai

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள சாம்பக்குளம் அரசுப் பள்ளிக்கு தண்ணீா் வசதி செய்துதர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சாம்பக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சாம்பக்குளம், பொழிகால், உடைகுளம், அண்ணாநகா், இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இந்தப் பள்ளியின் பயன்பாட்டுக்கு போதிய தண்ணீா் வசதி இல்லாததால், அருகேயுள்ள குளத்துக்கு சாலை வழியாக நடந்து சென்று மாணவிகள் குடங்களில் தண்ணீா் எடுத்து வருகின்றனா்.

எனவே, மாணவிகளின் நலன் கருதி, பள்ளியில் தண்ணீா் வசதியும், வேலைக்கு பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT