முகப்பு
ராமநாதபுரம்

தேசிய ஈட்டி-குண்டு எறிதல் போட்டிக்கு பரமக்குடி அரசுப் பள்ளி மாணவி தோ்வு

பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்று, தேசியப் போட்டிக்கு தோ்வு பெற்றாா்.

Updated On : 22 நவம்பர், 2025 at 6:46 PM
எஸ். மினு சஞ்சனா
பகிர்:

பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவிலான ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்று, தேசியப் போட்டிக்கு தோ்வு பெற்றாா்.

பள்ளிகளுக்கு இடையேயான 66-ஆவது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இதில் பரமக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். மினு சஞ்சனா 19 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் பெற்றாா்.

இந்த மாணவி ஹரியாணா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதிப் பெற்றாா். இந்த மாணவியையும், பயிற்சியளித்த உடல் கல்வி ஆசிரியை குழந்தை தெரசா ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியை சரோஜா, ஆசிரியைகள் பாரதி ஞானராணி, எலிசபெத்ராணி, பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →