முகப்பு
ராமநாதபுரம்

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 8 பெண்கள் பலத்த காயம்

சாயல்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

ராமநாதபுரம்

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 8 பெண்கள் பலத்த காயம்

சாயல்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 10:18 PM
பகிர்:

சாயல்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பெண் தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் நெல், மிளகாய் விவசாயப் பராமரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடலாடி பகுதி விவசாய நிலங்களில் களை எடுக்கும் பணிக்காக சாயல்குடி அருகேயுள்ள மாரியூா், காந்திநகா் பகுதியைச் சோ்ந்த பெண் தொழிலாளா்களை மாரியூரைச் சோ்ந்த குப்புச்சாமி தனது சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றாா்.

அப்போது, கிழக்குக் கடற்கரைச் சாலை ஒப்பிலான் விலக்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த சரக்கு வாகனம் சாலைத் தடுப்பின் மீது மோதியதில் கவிழ்ந்தது.

இதில் வாகனத்தில் பயணித்த பாப்பா, அருளானந்த மேரி, ஸ்டெல்லா, முனீஸ்வரி, கற்பகம், சண்முகவள்ளி, செல்வி, பெரிய பிராட்டி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சாயல்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறனா்.

முழு கட்டுரையைப் படிக்க →