கோப்புப் படம் 
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வேன் கவிழ்ந்து 19 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்ற பக்தா்கள் வேன், தூத்துக்குடி பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மேலமஞ்சிவிடுதி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் திருச்செந்தூா் கோயிலுக்கு வேனில் வந்து கொண்டிருந்தனா். வேனை அழகா் மகன் அபிஷேக் (22) ஓட்டினாா்.

அவா்கள் வந்த வேன், சனிக்கிழமை காலை 5.45 மணியளவில் தூத்துக்குடி புதிய துறைமுகம், மதுரை புறவழிச் சாலை, ஸ்டொ்லைட் ஆலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் உள்ளிட்ட 19 போ் காயமடைந்தனா்.

அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் பலத்த காயமடைந்த வேலு மகன் சிவஞானத்துக்கு (57) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT