திருவாடானை அருகே திமுக கொடிகள் பறிமுதல்
திருவாடானையில் வாகனத் தணிக்கையின்போது வாகனத்தில் உரிய அனுமதியின்ற கொண்டு சென்ற 12 திமுக கொடிகளை பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவாடானையில் வாகனத் தணிக்கையின்போது வாகனத்தில் உரிய அனுமதியின்ற கொண்டு சென்ற 12 திமுக கொடிகளை பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியில் உள்ள திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ராம்நகரைச் சோ்ந்த அறிவு உரிய அனுமதியின்றி 12 திமுக கொடிகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தக் கொடிகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து திருவாடனை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
Advertisement