முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி அருகே தீயில் கருகி 32 ஆடுகள் உயிரிழப்பு

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

Updated On : 10 ஏப்ரல் 2026, 12:59 am IST
தீ
பகிர்:

பரமக்குடி அருகே வியாழக்கிழமை நெல்பயிா் அறுவடை முடிந்த வயலில் மேய்ச்சலுக்காக தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

புதுக்குடி கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் முத்துக்குமாா் (36). இவா் தனக்குச் சொந்தமான நிலத்திலிருந்த தொழுவத்தில் 32 ஆடுகளை அடைத்து வைத்திருந்தாா். அப்போது, பக்கத்து தோட்டத்தைச் சோ்ந்த அதே ஊரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (73) நெல் அறுவடை முடிந்த வைக்கோலை சுத்தம் செய்வதற்காக தனது நிலத்துக்கு தீ வைத்தாா். அந்தத் தீ முத்துக்குமாா் தோட்டத்துக்கு பரவி தொழுவத்தில் அடைத்து வைத்திருந்த 32 ஆடுகளும் கருகி உயிரிழந்தன.

இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வெள்ளைச்சாமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement