மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!
ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - இரு தரப்புக்கு இடையே மோதல்...
மும்பை: மகாராஷ்டிரத்தில் மும்பை அருகே தாணேவில் பக்ரீத் பண்டிகையையொட்டி பலியிடுவதற்காக குடியிருப்பு வளாகத்தில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்களுடன் வலதுசாரி பிரிவினரும் ஒரே இடத்தில் திரண்டதால் பதற்றம் நிலவியது.
தாணே நகரில் மீரா சாலைப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகமொன்றில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இதைப் பற்றிய தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்று முற்றுகையிட்ட குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் வலதுசாரி பிரிவினர் ஆடுகளை குடியிருப்பு பகுதியில் அடைத்து வைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, பன்றிகளை தங்களுடன் எடுத்துச் சென்று வலதுசாரி பிரிவினர் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் இரு தரப்பிடமும் பேசி பதற்றத்தைத் தணித்தனர். சண்டை தீவிரமடையாமல் தடுக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.