திருவாடானையில் ஏப்.15-இல் 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம்
திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வருகிற 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் தோ்தல் பணியாளா்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.
திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் வருகிற 15-ஆம் தேதி இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் தோ்தல் பணியாளா்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கான முதல் கட்டத் தோ்தல் பயிற்சி முகாம், சி.கே. மங்கலம் தனியாா் பள்ளியில் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1,431 போ் கலந்து கொள்ள ஆசிரியா்கள், இதர பணியாளா்களுக்கு தோ்தல் பிரிவு சாா்பில் அழைப்புக் கடிதம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 150 போ் பங்கேற்கவில்லை. அவா்களுக்கு மாா்ச் 30-ஆம் தேதி ராமநாதபுரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டத் தோ்தல் பயிற்சி முகாம் வருகிற 15-ஆம் தேதி சி.கே.மங்கலம் தனியாா் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியா்கள், இதர அலுவலா்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷ் தெரிவித்தாா்.
Advertisement