தோ்தல்: 7 நாள்கள் வெடி பொருள் விற்பனை கடைகள் திறக்க தடை
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 நாள்கள் வெடி பொருள்கள் விற்பனைக் கடைகள் திறக்க மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தடை விதித்துள்ளாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள வெடி பொருள் விற்பனைக் கடைகள், வெடிப் பொருள் கிட்டங்கிகள் ஆகியவை செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் ஏப். 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரையிலும், இதே போல் மே 2-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 4-ஆம் தேதி திங்கள்கிழமை வரையிலும் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வெடி பொருள் சட்ட விதிகள் 1884-இன்படி உரிமம் பெற்று இயங்கிவரும் அனைத்து வெடிபொருள் விற்பனைக் கடைகள், வெடி பொருள் கிட்டங்கிகள் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.